மேலும் செய்திகள்
சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
06-Sep-2025
கோபி, கவுந்தப்பாடி அருகே செந்தாம்பாளையத்தில் கிராமத்தில், மகாத்மா காந்தியடிகளுக்கு கோவில் உள்ளது. கடந்த, 1997 பிப்.,6ல் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட இக்கோவிலில், கையில் தடியுடன் ஐந்தடி உயரத்தில் காந்தி சிலை, அதன் எதிரே அன்னை கஸ்துாரி பாய் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 'இங்கு ஆண்டுதோறும் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என மூன்று நாட்களில், சிறப்பு அபிஷேகம், அலங்காரமும் பிற நாட்களில் மூன்றுவேளை கால பூஜையும் நடக்கிறது. காந்தி ஜெயந்தி தினமான நேற்று பெருந்தலையூர் பவானி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. இருவரின் சிலைகளுக்கும் பல்வேறு அபிஷேகம் செய்து, புனித நீர் ஊற்றப்பட்டது. இதை தொடர்ந்து காந்தி சிலைக்கு கதர் வேட்டி, கையில் தேசிய கொடி, நெற்றியில் விபூதி, சந்தனம், குங்குமம் வைத்தும், கஸ்துாரி பாய் சிலைக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
06-Sep-2025