ஒடிசாவுக்கு சிறப்பு ரயில்
ஈரோடு:ஈரோட்டில் இருந்து இன்று மதியம், 2:35 மணிக்கு, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் புறப்படுகிறது. சேலத்துக்கு, 3:40 மணி, ஜோலார்பேட்டைக்கு மாலை, 5:58க்கும் செல்கிறது. சனிக்கிழமை நள்ளிரவு, 11:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடைகிறது. காட்பாடி, பெரம்பூர், கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீர் வழியாக செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக, தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.