/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / லட்சுமி நகர் பைபாஸில் மேம்பாலம் ரூ.45 கோடியில் அமைப்பது குறித்து ஆய்வு
லட்சுமி நகர் பைபாஸில் மேம்பாலம் ரூ.45 கோடியில் அமைப்பது குறித்து ஆய்வு
ஈரோடு, சித்தோடு ஆவின் அலுவலக வளாகத்தில், அங்கு ஆவினை உருவாக்கிய எஸ்.கே.பரமசிவன் உருவச்சிலை அமைக்கும் இடத்தை, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பார்வையிட்டார். பின், சேலம் - கோவை நெடுஞ்சாலையில், லட்சுமி நகர் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவது தொடர்பாக கலெக்டர் கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, ஆய்வு செய்தார். அவ்விடத்தில் ஏற்கனவே ஒரு மேம்பாலம் உள்ளது. அதே சமயம், கோவை பக்கம் மேம்பாலம் இல்லாததால், ரவுண்டானாவில் விபத்துகள், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.இதற்கான மதிப்பை, தேசிய நெடுஞ்சாலை துறை, 45 கோடி ரூபாய் என நிர்ணயித்து, திட்ட வரைவு தயாரித்துள்ளனர். இப்பாலம், 700 மீட்டர் நீளத்துக்கு ஆறு வழிச்சாலை அமைப்புடன் அமைய உள்ளது.