உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.61 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்

ரூ.61 லட்சத்துக்கு சர்க்கரை கொள்முதல்

கோபி, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், 61 லட்சம் ரூபாய்க்கு, பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம், நாட்டு சர்க்கரையை நேற்று கொள்முதல் செய்தது.கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டை, ஒரே விலையாக, 2,880 ரூபாய்க்கு ஏலம்போனது. இரண்டாம் தரம் (மீடியம்) ஒரே விலையாக, 2,820 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான, 2,186 நாட்டு சர்க்கரை மூட்டைகளை, 61.76 லட்சம் ரூபாய்க்கு, பழனி கோவில் தேவஸ்தான நிர்வாகம் கொள்முதல் செய்ததாக, விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை