உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பட்டா நிலம் அளந்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

பட்டா நிலம் அளந்து தரக்கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே நிழலி கிராமத்தில், 17 ஆண்டுக்கு முன்பு, 53 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை இதுவரை அளந்துவி-டாமல் இருப்பதை கண்டித்து, திருப்பூர் வடக்கு மாவட்ட காங்., செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், 22 பேர் காங்கயம் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து ஆர்ப்-பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடு-பட்டவர்களிடம், தாசில்தார் மோகனன் பேச்சுவார்த்தை நடத்-தினார். இதில் வரும், 27ம் தேதி மேற்கண்ட இடத்தை அளந்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ