உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அரசு பஸ்சில் கியர் ராடு கட்டானதால் பரபரப்பு

அரசு பஸ்சில் கியர் ராடு கட்டானதால் பரபரப்பு

கோபி, கோபியில் இருந்து பெருந்துறை செல்லும், ௭ம் நெம்பர் அரசு டவுன் பஸ், 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று சென்றது. வடுகபாளையம் என்ற இடத்தில் காலை, 10:50 மணிக்கு சென்றபோது, 'கியர்' ராடு உடைந்து விட்டது. இதனால் சுதாரித்த டிரைவர், பஸ்சை ஓரங்கட்டி நிறுத்தினார். பயணிகள் காயமின்றி இறக்கி விடப்பட்டு, மாற்று அரசு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ