மர்ம விலங்கு கடித்து மூன்று ஆடுகள் பலி
பவானி பவானி அருகே ஜம்பை, பெருமாள் பாளையம் புதுாரை சேர்ந்தவர் கண்ணாயாள், 75; தோட்டத்தில் பட்டி அமைத்து, 10க்கும் மேற்பட்ட ஆடு வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றபோது, மூன்று ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தன. இரண்டு ஆடுகள் உயிருக்கு போராடியபடி இருந்தன. தகவலின்படி சென்ற கால்நடை மருத்துவர் பரிசோதனைக்குப் பிறகு ஆடுகள் புதைக்கப்ட்டன. மர்ம விலங்கு எதுவென்று தெரியவில்லை.