உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி

நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி

வெள்ளகோவில், ஜன. 1-வெள்ளகோவிலை அடுத்த முத்துார், மங்கலப்பட்டியில், இயற்கை போராளி நம்மாழ்வாருக்கு நினைவஞ்சலி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க நிர்வாகி வயலுார் சின்னச்சாமி தலைமை வகித்தார். கீழ்பவானி விவசாயிகள் பாசன சபை தலைவர் செங்கோட்டையன், கீழ்பவானி பாசனசபை பாதுகாப்பு இயக்க தலைவர் ரவி, ஈரோடு மாவட்டகசிவுநீர் பாசன சபை தலைவர் தேவனசாமி ஆகியோர் பேசினர். பாண்டியாறு-மாயாறு திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை