உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறது

வைகுண்ட ஏகாதசி விழா வரும் 31ல் துவங்குகிறதுஈரோடு, டிச. 27-ஈரோடு, கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும், 31ல் துவங்குகிறது. 31 முதல் ஜன., 9 வரை பகல் பத்து உற்சவம் நடக்கிறது. 9 மாலை 6:30 முதல் 9:00 மணி வரை கஸ்துாரி அரங்கநாதர் மோகினி அலங்காரத்தில் அருள் பாலிப்பார். 10 அதிகாலை, 3:00 மணிக்கு திருப்பல்லாண்டு, திருப்பள்ளி எழுச்சி, 5:00 மணிக்கு பரமபத வாசல் திறப்பு நடக்கிறது. 11 முதல் 20 வரை ராப்பத்து உற்சவம் நடைபெறும். பகல், ராப்பத்து உற்சவ நாட்களில் திவ்ய பிரபந்த பாராயணம் பாடப்படும். 20ல் நம்மாழ்வார் மோட்சம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை