வரட்டுப்பள்ளம் அணையில்பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
வரட்டுப்பள்ளம் அணையில்பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அந்தியூர் : பர்கூர் மலை அடிவாரத்தில் உள்ள, வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து, பாசனத்துக்கு நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் அந்தியூர் வட்டத்துக்கு உட்பட்ட, 809 ஏக்கர் பழைய ஆயக்கட்டு நிலம் பாசன வசதி பெறும். வரும், 17ம் தேதி வரை, 12 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று, பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.