வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு கட்
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ் விடுத்துள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, தொழில் வரி, குடிநீர் கட்டணம் உள்ளிட்ட அனைத்து வரிகளையும் அலுவல-கத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்-தது.வரும், 31ம் தேதிக்குள் வரிகளை செலுத்த வேண்டும். அவ்-வாறு வரி செலுத்தாதவர்களின் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவ-னங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.வரி செலுத்தினாலும் துண்டிப்பு செய்யப்பட்ட இணைப்புகள் திரும்ப வழங்கப்பட மாட்டாது. இவ்வாறு அறிக்கையில் தெரி-வித்துள்ளார்.