ஜவுளி சந்தையில் மொத்த விற்பனை விர்ர்
ஈரோடு: ஈரோடு மாநகரில் பல்வேறு பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றிரவு வரை ஜவுளிச்சந்தை விற்பனை நடந்தது. இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து கடைக்காரர்கள், மொத்த ஜவுளி வியாபாரிகள் வந்திருந்தனர். மார்ச், ஏப்., மாதங்களில் பள்ளி விடுமுறை, கோடை துவங்குவதாலும் ஜவுளி விற்பனை அதிகரிக்கும் என்பதால், மொத்தமாக ஆர்டர் வழங்கி உள்ளனர். நேற்று, 25 சதவீதம் வரை மொத்த விற்பனையும், 30 சதவீதம் வரை சில்லறை விற்பனையும் நடந்தது. இவ்வாறு கூறினர்.