மனைவி மாயம்; கணவர் புகார்
கோபி, கோபி அருகே வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம், 40, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சரண்யா, 30; தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சரண்யா கடந்த, 22ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மாயமானார். சண்முகசுந்தரம் புகாரின்படி கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.