கடம்பூரில் காய்ச்சலுக்கு பெண் சாவு
சத்தி, டிச. 13-கடம்பூர் அருகேயுள்ள மூலக்கடம்பூரை சேர்ந்தவர் பழனிச்சாமி மனைவி தங்கமணி, 37; கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பிறகு சத்தி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த, 10ம் தேதி இரவு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே இறந்து விட்டார். கடம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.