உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

காங்கேயம் :காங்கேயம், பழைய கோட்டைரோடு, சத்திரவலசு பகுதியில் நேற்று மாலை, பி.ஏ.பி., வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதந்தது. அப்பகுதி மக்கள் தகவலின்படி சென்ற காங்கேமயம் போலீசார், மக்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண்ணுக்கு, 45 வயது இருக்கும். யார், எந்த ஊரை சேர்ந்தவர், தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ