உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாய்க்காலில் போதையில் குளித்த தொழிலாளி பலி

வாய்க்காலில் போதையில் குளித்த தொழிலாளி பலி

சென்னிமலை, சென்னிமலை யூனியன் ராமலிங்கபுரம், சத்திநகரை சேர்ந்தவர் தங்கராசு, 33; தேங்காய் உரிக்கும் தொழிலாளி. இவரின் மனைவி பிரிந்து சென்று விட்டார். உள்ளூரில் நேற்று நடந்த திருமணத்துக்கு சென்றவர், நண்பர்களுடன் சேர்ந்து சக்தி நகர் எல்.பி.பி., வாய்க்கால் பாலம் அருகில் மது அருந்தியுள்ளார். பிறகு வாய்க்காலில் குளித்த்துள்ளார்.போதையால் நீச்சல் தெரிந்தும் தண்ணீரில் மூழ்கி விட்டார். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தங்கராசு உடலை மீட்டனர். சென்னிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !