யானை தாக்கியதில் தொழிலாளி பலி
தாளவாடி:தாளவாடிமலை, ஆசனுார் ராமரனையை சேர்ந்தவர் காளன், 60; நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகள் தொடர்ந்து சத்தமிட்டதால் எழுந்து சென்று பார்த்தார். அங்கு நின்றிருந்த ஒற்றை யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் பலியானார். ஆசனுார் போலீசார், தலமலை வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.