உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா விற்ற 6 பேர் கைது

கஞ்சா விற்ற 6 பேர் கைது

கச்சிராயபாளையம்: குதிரைச்சந்தல் கிராமத்தில் கஞ்சா விற்ற 6 பேரை போலீசார் கைது செய்தனர்.கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் குதிரைச்சந்தல் கிராமத்தில் ரோந்துப் பணி மேற்கொண்டனர்.அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கருணாகரன் மகன் அசோக், 24; வேலு மகன் சிவா, 25; செல்வன் மகன் மணிகண்டன், 29; ராம்பாபு மகன் சோனு, 27; முருகன் மகன் ஏழுமலை, 23; விஜயன் மகன் முருகன், 29; ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ