உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணை

இளம்பெண் மாயம்; போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கடலுார் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த பொன்னேரி கிராமத்தை சேர்ந்த சரவணன் மனைவி அருணா,24; இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஆட்டோ டிரைவரான சரவணன் சென்னையில் ஆட்டோ ஓட்டி வருவதால் கடந்த ஒரு வருடமாக பாண்டியங்குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் அருணா குழந்தைகளுடன் வசித்து வந்தார்.கடந்த 30 ம் தேதி பகல் 2 மணியளவில் அருணா, திட்டக்குடி சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர்.அதன் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ