உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

அகில இந்திய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாகபங்கேற்கவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தனித்தேர்வர்களுக்கான முதல் நிலைத்தேர்வு கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ் தேசிய தொழிற்பயிற்சி குழுமத்தால் நடத்தப்படுகிறது. அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து 200ரூபாய்தேர்வு கட்டணம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் தேர்வு வரும் அக்டோபர்15 அன்றும் மற்றும் செய்முறை தேர்வு வரும் 16 அன்றும் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.தனித்தேர்வராக விண்ணப்பிக்க வரும் 18ம் தேதி கடைசி நாளாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !