உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்

கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கல்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த ஜி.அரியூர் ஊராட்சியில், திருக்கோவிலுார் ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல பணி ஆணை வழங்கும் நிகச்சி நடந்தது.ஒன்றிய குழு சேர்மன் அஞ்சலாட்சி அரசக்குமார், துணை சேர்மன் தனம் சக்திவேல், பி.டி.ஓ.,க்கள் கஸ்துாரி, கொளஞ்சி வேல், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யனார், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி, 230 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்ல பணி ஆணைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !