மேலும் செய்திகள்
மது கடத்தல் வாகனங்கள் மார்ச் 11ல் பொது ஏலம்
27-Feb-2025
கள்ளக்குறிச்சி: வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திகுறிப்பு: மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட, 22 இரு சக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதில், கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும், 17 ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை அணுகி ஏலம் எடுத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
27-Feb-2025