உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஏமப்பேரை சேர்ந்தவர் முருகன் மகள் ஆதிலட்சுமி, பிளஸ் 2 படித்து முடித்த இவர் தற்போது டெய்லரிங் வகுப்பு செல்கிறார். கடந்த 4ம் தேதி டெய்லரிங் வகுப்புக்கு செல்வதாக பெற்றோர்களிடம் தெரிவித்து விட்டு சென்றவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடியுள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் மகள் ஆதிலட்சுமியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாய் தேவி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை