திருக்கோவிலுாரில் மயானக் கொள்ளை
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் நடந்த மயானக் கொள்ளையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.திருக்கோவிலுார், கீழையூர், அங்காளம்மன் கோவிலில் நேற்று மயானக் கொள்ளை வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் ஊர்வலம், ஏரிக்கரையில் இருந்து, தாரை தப்பட்டையுடன் புறப்பட்டது.பக்தர்கள், பல்வேறு வேடங்களில் கஞ்சுளி கபாலம் கையிலேந்தி ஊர்வலத்தில் பங்கேற்றனர். மதியம் 1:00 மணிக்கு சுவாமி கோவிலை அடைந்தவுடன் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. இரவு 9:00 மணிக்கு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை பருவத ராஜகுல மரபினர் மற்றும் பக்தர்கள் செய்தனர்.