அரசு வேலை கேட்டு கர்ப்பிணி மனு
கள்ளக்குறிச்சி; கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க, கர்ப்பிணி பெண் கலெக்டரிடம் மனு அளித்தார்.அம்மகளத்துாரைச் சேர்ந்த பழனிவேல் மனைவி ஐஸ்வர்யா, 25; அளித்த மனுவில், 'தனியார் நிறுவனத்தில் வேலை செய்த தனது கணவர், விபத்தில் இறந்தார். அவரது, உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளோம். கணவர் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2 குழந்தைகள் இருப்பதால் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.