உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வெள்ளி கொலுசு திருட்டு: போலீஸ் விசாரணை

வெள்ளி கொலுசு திருட்டு: போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி,; வரஞ்சரம் அருகில், வெள்ளி கொலுசை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.வரஞ்சரம் அடுத்த முகமதியார்பேட்டையைச் சேர்ந்தவர் ஜாபர்அலி மனைவி ஆஷியா பானு, 45; கடந்த, 27ம் தேதி இரவு குடும்பத்தினருடன் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு, 2:15 மணியளவில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்தார். அப்போது, வீட்டின் வெளிக்கதவு திறந்திருந்தது. சந்தேகம் அடைந்தவர், பீரோவை திறந்து பார்த்தபோது, 100 கிராம் கொண்ட வெள்ளிக்கொலுசு திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை