உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, கலையநல்லுார் டாஸ்மாக் கடை அருகே பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் மாசிலாமணி, 33; கிருஷ்ணன் மகன் ஏழுமலை, 39; ஆகிய இருவரும் ஆட்டோவில் மதுபாட்டில் விற்றது தெரிந்தது.உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, 180 மி.லி., அளவு கொண்ட 69 மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை