உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / நெல், உளுந்து, கரும்புக்கு காப்பீடு செய்திட வேளாண் துறை அழைப்பு

நெல், உளுந்து, கரும்புக்கு காப்பீடு செய்திட வேளாண் துறை அழைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாகுபடி செய்துள்ள நெல், உளுந்து மற்றும் கரும்பு பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட வேளாண்துறை அறிவித்துள்ளது.மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் இந்த ஆண்டு சிறப்பு பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் நெற்பயிருக்கு வரும்15ம் தேதி, ரபி பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் உளுந்து பயிருக்கு வரும் 15ம் தேதி, கரும்பு பயிருக்கு 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.பிரீமியம் கட்டணம் ஏக்கருக்கு நெற்பயிருக்கு 511 ரூபாயும், உளுந்துக்கு 228 ரூபாய் மற்றும் கரும்புக்கு 5.2592 ரூபாய் ஆகும். இந்த தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவை இதற்கான ஆவணங்கள் ஆகும். எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை