மேலும் செய்திகள்
பெருமாள் கோவிலில் ஏகாதசி உற்சவம்
20-Aug-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஆரா ஆனந்த கிருஷ்ணருக்கு அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது. கள்ளக்குறிச்சி, கச்சிராயபாளையம் சாலை, அம்மன் நகர் ஆரா ஆனந்த சீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள கிருஷ்ணருக்கு கிருஷ்ண பக்ஷ அஷ்டமி தினத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜை நடந்தது. உற்சவர் சுவாமி கிருஷ்ணருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்து, கோவில் வளாகத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. திரளான பக்தர்கள் கிருஷ்ணர் பஜனை பாடல்களைப் பாடி, தரிசனம் செய்தனர்.
20-Aug-2025