மேலும் செய்திகள்
மணல் கடத்தல் வாகனம் பறிமுதல்
04-Jul-2025
உளுந்துார்பேட்டை: உளுந்தூர்பேட்டை யில் மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். உளுந்துார்பேட்டை அடுத்த காச்சக்குடி அருகே மணிமுத்தாற்றில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மணல் கடத்திய மாட்டுவண்டியை பறிமுதல் செய்தனர். இது குறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து மணல் கடத்திய காச்சக்குடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன், 58; கைது செய்தனர்.
04-Jul-2025