உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

கஞ்சா வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் உட்பட இரண்டு பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஏமப்பேர் பாஞ்சாலி அம்மன் கோவில் அருகே நின்றிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோடினர். போலீசார் துரத்திச் சென்று ஒருவரை பிடித்து விசாரித்தனர்.அதில் பிடிபட்டவர் 17 வயது சிறுவன் என்பதும், தப்பியோடியவர் மாயக்கண்ணன் மகன் ஆதி என்பதும், கஞ்சா வைத்திருந்ததும் தெரிந்தது. உடன் சிறுவனிடமிருந்து 30 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்