உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்விரோத தகராறில் தாக்குதல் 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

முன்விரோத தகராறில் தாக்குதல் 10 பேர் மீது வழக்கு; ஒருவர் கைது

சின்னசேலம் : காட்டனந்தல் கிராமத்தில் முன் விரோத தகராறில் தாக்கி கொண்ட 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து ஒருவரை கைது செய்தனர். சின்னசேலம் அடுத்த காட்டனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பழனிவேல், 48; இவருக்கும் அவரது உறவினரான கிருஷ்ணமூர்த்தி, 49; என்பவருக்கும் நிலம் தொடர்பாக முன் விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், 4 பேர் காயம் அடைந்தனர். இது குறித்த இரு தரப்பு புகாரின் பேரில், மல்லிகா, வினோத், அம்பிகா, கிருஷ்ணன், ஜெயக்கொடி, பழனிவேல் உட்பட 10 பேர் மீது வழக்கு பதிந்த கீழ்க்குப்பம் போலீசார் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி