சிறுமி கடத்தல் வாலிபர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலுார் அருகே சிறுமியை கடத்தி சென்ற வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தை சேர்ந்த பாபு மகன் ராஜா, 24; இவர் கடைக்கு சென்ற 17 வயது சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் ராஜா மீது கடத்தல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.