உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபருக்கு கத்திவெட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு

வாலிபருக்கு கத்திவெட்டு 5 பேர் மீது வழக்குப் பதிவு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை கத்தியால் வெட்டிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலுார் அடுத்த முடியனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் மகன் சேரன், 21; அதே ஊரைச் சேர்ந்தவர்கள் ராமலிங்க மகன் கணேசன், 23; கல்யாணசுந்தரம் மகன் வைரம், 22; இவர்களுக்கிடையே கடந்த 8 மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் முடியனுார் வீரன் கோவில் அருகே கணேசன், வைரம் மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 3 பேர் சேர்ந்து சேரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த சேரன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலப்பந்தல் போலீசார் வழக்குப் பதிந்து கணேசன், வைரம் உட்பட 5 பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை