உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

உளுந்துார்பேட்டை : திருநாவலுார் அருகே மாடு மேய்த்த பெண்ணிடம் 3 சவரன் தாலிச்செயினை பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி சசிகலா, 32; இவர், நேற்று மதியம் 2:00 மணியளவில் திருநாவலுார் வயல்வெளி சாலையில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் சசிகலா அணிந்திருந்த 3 சவரன் தாலிச் செயினை அறுத்துச் சென்றனர்.இதுகுறித்து சசிகலா கொடுத்த புகாரின் பேரில் திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி