உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கார் மோதி மாடு பலி; விவசாயி படுகாயம்

கார் மோதி மாடு பலி; விவசாயி படுகாயம்

கள்ளக்குறிச்சி; எலவனாசூர்கோட்டை அருகே உழவு மாடுகளுடன் சாலையை கடந்த விவசாயி மீது கார் மோதி மாடு இறந்தது. விவசாயி காயமடைந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.புத்துாரைச் சேர்ந்தவர் குணசேகரன், 45; விவசாயி. இவர், நேற்று காலை 7.15 மணியளவில் வயலில் உழவு ஓட்டுவதற்கு இரு மாடுகளுடன் சென்றார். பரமேஸ்வரிமங்கலம் ஏரியின் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது கோயம்புத்துார் - சென்னை நோக்கிச் சென்ற டாடா பன்ச் கார், குணசேகரன் மற்றும் மாடுகள் மீது மோதியது. இதில் ஒரு மாடு சம்பவ இடத்திலேயே இறந்தது. குணசேகரன் படுகாயமடைந்தார்.எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை