தாய் கண்டித்ததால் மகள் தற்கொலை
ரிஷிவந்தியம் : பெரியபகண்டையில் தாய் திட்டியதால் மனமுடைந்த மகள் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவள்ளூர் மாவட்டம், பாடிபுதுார் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இவரது குடும்பத்தினர் தற்போது வாணாபுரம் அடுத்த பெரியபகண்டையில் வசிக்கின்றனர். உதயக்குமார் மகள் கம்ஸிகா,16; இவர், அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். கம்ஸிகா சரியாக படிக்காமலும், வீட்டு வேலை செய்யாமல் இருந்ததால், அவரது தாய் ஹேமலா கண்டித்தார். இதனால் மனமுடைந்த கம்ஸிகா நேற்று முன்தினம் இரவு தனது அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை அவரது குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது கம்ஸிகா இறந்த நிலையில் இருப்பது தெரிந்தது. தகவலறிந்த பகண்டை கூட்ரோடு போலீசார் இறந்த கம்ஸிகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.