மேலும் செய்திகள்
கடை உரிமையாளர்களிடையே தகராறு: 2 பேர் மீது வழக்கு
13-Jan-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே குடும்ப தகராறில் கணவன், மனைவி உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரஞ்சித்,28; இவரது மனைவி கார்த்திகா, 21; இருவருக்கும் கடந்த 2022ம் ஆண்டு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் ரஞ்சித் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 12 ம் தேதி ரஞ்சித் மதுபோதையில் வந்து மனைவி கார்த்திகாவிடம் தகராறில் ஈடுபட்டார்.இதனையறிந்த கார்த்திகாவின் தந்தை பெரியசாமி, மகளை அடித்தது குறித்து ரஞ்சித்யிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து இரு தரப்பிலும் கொடுத்த புகாரில் கள்ளக்குறிச்சி போலீசார் பெரியசாமி, கார்த்திகா மற்றொரு தரப்பில் ரஞ்சித், அவரது தந்தை ராமலிங்கம், தாய் சாந்தி ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
13-Jan-2025