உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கீழே விழுந்த முதியவர் பலி

கீழே விழுந்த முதியவர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் நாராயணன், 63; இவர், கடந்த சில ஆண்டு களாக நீரிழிவு நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 31ம் தேதி வீட்டில் நிலை தடுமாறி கீழே விழுந்த நாராயணனுக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் நாராயணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ