உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின்மோட்டார் திருட்டு; மர்ம ஆசாமிக்கு வலை

மின்மோட்டார் திருட்டு; மர்ம ஆசாமிக்கு வலை

சங்கராபுரம்; சங்கராபுரம் அருகே விவசாய மின்மோட்டார் மற்றும் ஒயரை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராரபுரம் அடுத்த பொய்குணம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி திலகவதி, 52; இவர், கடந்த 20ம் தேதி தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு மோட்டாரை நிறுத்தி விட்டு வந்துள்ளார். மறுநாள் காலை 7:00 மணிக்கு சென்று பார்த்தபோது 5 எச்.பி., மின்மோட்டார், 21 மீட்டர் ஒயர் மற்றும் கயிறு உள்ளிட்ட 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை