உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகளுடன் தகராறு தந்தை தற்கொலை

மகளுடன் தகராறு தந்தை தற்கொலை

திருக்கோவிலுார் -: திருக்கோவிலுார் அருகே மகளுடன் ஏற்பட்ட சண்டையில், பூச்சி மருந்து குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.திருக்கோவிலுார் அடுத்த பெரியானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன், 60; கடந்த 9ம் தேதி மகள் புஷ்பா, 37; வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கநாதன், குடிபோதையில் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை குடித்துவிட்டு மயங்கினார்.உடனடியாக திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.இது குறித்து அவரது மகள் கொடுத்த புகாரின் பேரில், திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை