மகள் மாயம் தந்தை புகார்
கள்ளக்குறிச்சி; சின்னசேலம் அருகே மாயமான மகளை கண்டுபிடித்து தரக்கோரி தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். சின்னசேலம் அடுத்த வினைதீர்த்தாபுரத்தை சேர்ந்தவர் சீனுவாசன் மகள் சரண்யா, 27; செவிலியர். தனியார் மெடிக்கலில் பணிபுரிகிறார். கடந்த 9ம் தேதி பணிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மாயமான மகள் சரண்யாவை கண்டுபிடித்து தரக்கோரி இவரது தந்தை சீனுவாசன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.