மேலும் செய்திகள்
விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற அழைப்பு
26-Jun-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள், மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு, மாத ஓய்வூதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் விளையாட்டு வீரர்கள் www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம், மாநில அரசின் ஓய்வூதியம் பெறுபவர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியாது. மேலும், முதியோர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.விண்ணப்பதாரர்கள் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று முதல் மூன்று இடங்களை பெற்றிருக்க வேண்டும். ஆக., மாதம் 58 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை 74017 03474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Jun-2025