மேலும் செய்திகள்
இருசக்கர வாகன விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி
09-May-2025
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே, ஏரியில் மூழ்கிய சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்தார். மணலுார்பேட்டை அடுத்த முருக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் மகள் விஜயதாரணி, 4; இவர் நேற்று முன்தினம் மாலை சிறுவர்களுடன் அருகில் இருக்கும் ஏரியில் விளையாடி கொண்டிருந்தார். திடீரென நீரில் மூழ்கியதால் அவருடன், விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கூச்சலிட்டனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து விஜயதாரணியை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-May-2025