மேலும் செய்திகள்
பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம்
28-Oct-2025
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில்நடந்த குறைகேட்புக் கூட்டத்தில் 293 மனுக்கள் பெறப்பட்டது. கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகரா ட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல்,இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் தொடர்பாக 293 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
28-Oct-2025