உள்ளூர் செய்திகள்

குட்கா விற்றவர் கைது

சின்னசேலம்: சின்னசேலம் கடை வீதியில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சின்னசேலம் கடை வீதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்பனை குறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சம்பத்குமார், 44, என்பவரின் மளிகை கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காாக மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, சம்பத்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை