உள்ளூர் செய்திகள்

ஹான்ஸ் விற்றவர் கைது

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அருகே ஹான்ஸ் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.ரிஷிவந்தியம் சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்பாடி கிராமத்தை சேர்ந்த சப்பானி மகன் சுப்ரமணியன்,43; என்பவர் அவரது மளிகை கடையில் அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா பொருட்களை விற்றது தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ