மாணவர்கள் முன்னேற்றத்திற்கு உழைப்பேன்
இப்பள்ளியில் படித்த போது தலைமை ஆசிரியர் காசிம், ஆசிரியர்கள் பரமசிவம், நடன குஞ்சுதபாதம், பாண்டுரங்கன், ராஜேந்திரன், சுப்பிரமணி, ஆனந்தராஜ் ஆகியோர் பாடங்களை சிறப்பாக கற்பித்து மாணவர்களின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டியாக இருந்தனர். இப்பள்ளியில் படித்தது பெருமையாக உள்ளது. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பில் குடிநீர் டேங்க் வசதி ஏற்படுத்தி கொடுத்தோம். பேரூரட்சித் தலைவராக இருந்தபோது பள்ளிக்கு தேவையான வசதிகள், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் வழங்கி உள்ளேன். இப்பள்ளி மாணவர்கள் முன்னேற்றத்திற்காக உழைப்பேன். ஜெய்சங்கர், நகராட்சி கவுன்சிலர்.