உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணி ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் ரூ. 139.41 கோடி மதிப்பில், புதிய கலெக்டர் அலுவலகம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில் 8 தளங்கள் அமைக்கப்படுகிறது. கலெ க்டர் அலுவலக கட்டடக் கட்டுமானத்தின் தற்போதைய நிலை, தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள், முடிவுற்ற பணிகள் குறித்து கலெக்டர் நேற்று ஆய்வு செய்தார். முடிவுற்ற பணிகளின் விவரம் குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டும், கட்டுமானம் தொடர்பாக பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்து ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை தரமாகவும் விரைவாகவும் மேற்கொள்ளவும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்திட வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டார். ஆய்வின் போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர்கள் மாலா, இமாம் ஷெரிப் உடனி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !