உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை. 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை, அன்னை தெரசா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாலமோன், 61; ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவி ஆலிஸ் உடன் கள்ளக்குறிச்சி சென்றிருந்தார். இரவு 10:00 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகை, 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.சாலமோன் கொடுத்த புகாரின் பேரில் உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ